day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தேயிலை தோட்டத்தில் கரடி

தேயிலை தோட்டத்தில் கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளது. நீர்வீழ்ச்சி பகுதியை ஒட்டி உள்ள தேயிலைத் தோட்டத்தில், மரம் மீது கரடி ஒன்று ஏறி, இறங்கி விளையாடி மகிழ்ந்தது. இதை கண்டு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இதனையடுத்து, சிறிது நேரம் அங்கு விளையாடிய கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சியை தேயிலைப் பறிக்கும் தொழிலாளர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் தேயிலைத் தோட்டத்தில் அதிகரித்து இருப்பதால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!