மதுரையில் நடைபெற்ற 29வது மாநில மூத்தோர் தடகள போட்டியில், 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சேலம் பெரமனூரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் கலந்துகொண்டு விளையாடினார். அவருக்கு வயது 75. இதில் அவர், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும் வென்று சாதனை புரிந்தார். இதைத்தொடர்ந்து வரும் 27ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.