உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உலக பொருளாதரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதர தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையர் எரிவாயு விலையையும் எண்ணைய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. மேலும் இதனால் பங்குசந்தைகளும் கடும் சரிவை கண்டு வருகிறன. இந்த வரிசையில், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், இன்று தங்கம் விலை சவரன் 40 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.4925க்கும் சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.39400க்கும் விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42592க்கு விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.71.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,700ஆக உள்ளது.