இரட்டை இலை சின்னம் பெற்றுத்தருவதாக கூறிய விவகாரத்தில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது மேலும் ஒரு பண மோசடி வழக்கை அமலாக்கத்துறையினர் பதிவு செய்தனர். சிறையில் இருக்கும் அவரை, இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பண மோசடி தொடர்பாக, சுகேஷ் சந்திரசேகரிடம் ஏழு நாள் காவலில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.