சீனாவின் சிச்சுவான் மாகாணம் யிபின் நகரில் உள்ள ஜிவ்வென் கவுண்டியில் இன்று காலை 7.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோளில் 5.1ஆக பதிவாகி இருப்பதாக சீன பூகம்ப மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்ப்பட்ட மையப்பகுதியைச் சுற்றி 5 கிலோமீட்டருக்குள் பல கிராமங்கள் உள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிரிழப்புகள் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.