day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது

ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது

சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தளத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப் பாதைகளில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று ஏற்காடு மலைப்பாதை 18ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏற்காடு காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு ராட்சத பாறையை உடைத்து அப்புறப்படுத்தினர். முன்னதாக பாறை உருண்டு விழுந்த போது வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதும் ஏற்படவில்லை. மேலும், பாறை அகற்றப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மலைப்பாதையில் திடீரென ராட்சத பாறை உருண்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!