பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது கட்சி ஆதரவாளர்கள் லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த தகவல் அறிந்த நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து இரு தரப்பு மோதலை அங்கு இருந்த போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில், புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்ந்து எடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.