இந்தோனேசியாவில் இன்று காலை 6.53 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலவேசி தீவின் இந்த நிலநடுக்கம் உரணப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் தேசிய நிலஅதிர்வியல் மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ள நிலநடுக்கம் சுலவேசி தீவின் கொடமோபகு நகரில் இருந்து 779 கிலோமீட்டர் தொலைவில் கடல்மட்டத்தின் 50 அடி ஆழத்தில் உருவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசிய நகரங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதேவேளை, நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.