இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டேவை மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளார். ஜெனரல் மனோஜ் முகுந்த் எம்.எம். நரவனே இராணுவ தலைமை தளபதி பொறுப்பை மனோஜ் பாண்டேவிடம் ஒப்படைத்தார். இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகடெமியில் பயின்றவர். மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிகோபார் பிரிவு தளபதியாகவும் பணியாற்றியவர். தற்போது இந்தியாவின் 29ஆவது ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.