ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக ரூ. 40 கோடி செலவில் நவீன விடுதி கட்டப்படும் என அறிவித்தார். வன்கொடுமையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கொடுத்த வேண்டுக்கோளை ஏற்று ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்றி இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.