day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அமைச்சரின் ராஜினாமா கடிதம் அங்கீகரிப்பு!

அமைச்சரின் ராஜினாமா கடிதம் அங்கீகரிப்பு!

கர்நாடகாவில் பி.ஜே.பி. தொண்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டது அம்மாநில அரசியலில் புயல்வீசத் தொடங்கியது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இப்பிரச்சினை அம்மாநில அரசுக்கும் அமைச்சர் ஈசுவரப்பாவுக்கும் மேலும் நெருக்கடியைத் தந்தது. இதையடுத்து, ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததுடன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையைச் சந்தித்து, தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். அந்தக் கடிதத்தை உடனடியாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பிவைத்தார் முதல்வர் பசவராஜ். இந்த நிலையில், ஈசுவரப்பாவின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் தாவர்சந்த் கெலாட் அங்கீகரித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!