காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது. வந்துவிட்டது என்று கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்’ என்று அவர் கூறினார்.